மூணாறில் கடும் உறைபனி: தேயிலை செடிகள் கருகின
2020-02-23@ 10:39:06

மூணாறு: மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இரவு நேரங்களில் உறைபனி வாட்டுவதால், தேயிலைச்செடிகள் கருகுகின்றன. இதனால், எஸ்டேட் உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் ‘தென்னகத்து காஷ்மீர்’ என மூணாறு அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் தற்போது பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தாலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி ஏற்படுகிறது. சாலையோர புல்தரைகளில் பனி படர்ந்து மூடிக்கிடப்பதை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
மூணாறு மற்றும் லட்சுமி எஸ்டேட், சிவன்மலை பகுதிகளில் குளிரின் அளவு மைனஸ் 1 டிகிரியாகவும், செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் மைனஸ் பூஜ்ஜியமாக இருந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக எஸ்டேட்களில் தேயிலைச் செடிகள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால், உரிமையாளர்கள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில், மூணாறில் காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் 28 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருமுல்லைவாயலில் சடலங்கள் எரியும்போது மேலெழும்பும் நச்சு புகை: சுற்றுச்சூழல் பாதிப்பால் அவதி
மாமல்லபுரம் அருகே சாய்ந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம்
இரவுநேர ஊரடங்கால் விவசாயிகள் அவதி: விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் அதிகரிப்பு!: 2 மாதத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு..மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!
திருச்சி அரசு மருத்துவமனையில் நரக வேதனையை அனுபவிக்கும் கொரோனா நோயாளிகள்
வானாபாடி ஊராட்சி மாணிக்கம் நகரில் ஆபத்தான மின்சார டிரான்ஸ்பார்மர்: மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!