சொகுசு கப்பலில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க ஜப்பான் அரசு முடிவு!
2020-02-18@ 16:33:28

டோக்கியோ: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. டைமன்ட் பிரின்சஸ் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல் கடந்த 3ம் தேதி முதல் ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஓரு முதியவருக்கு பரவிய கொரோனா வைரஸ் தற்போது 454 பேரை தாக்கியுள்ளது. மொத்தமுள்ள 3,700 பேரில் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவிய வண்ணம் உள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் மருந்துகளை செலுத்தி சிகிச்சையளிக்க அந்நாட்டு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் யோஷிகிடே சுகா, எச்ஐவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். ஜப்பான் சொகுசு கப்பலில் 138 இந்திய பயணிகள் உள்ளனர். இவர்களில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனிடையே 300 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு விமானம் மூலம் தனது நாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டது. வைரஸ் பரவுவதை தடுக்க வெள்ளிக்கிழமைக்குள் தொற்று இல்லாத பயணிகளை வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. கப்பலில் உள்ளவர்கள் மற்றும் தரையில் உள்ளவர்கள் என மொத்தம் 540 பேரை அங்கு கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் எச்ஐவிக்கான மருந்துகளை கலந்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித்த நிலையில், ஜப்பானும் அந்த முயற்சியில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் கோவிட் 19 எய்ட்ஸ் எச்ஐவி மருந்து Japan luxury ship Aids medicine coronavirus ஜப்பான்மேலும் செய்திகள்
பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
அவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்
அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு
பாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.!!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்