3வது நாளாக ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக்: தமிழகம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
2020-02-16@ 16:09:02

சென்னை: தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப் போவதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 14ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து, 14ம் தேதி நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் சார்பில், சென்னை பால் பண்ணைகளுக்கு தேவையான பாலினை பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் பால் டேங்கர்கள் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. இருப்பினும் மாநிலம் முழுவதும் பால் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு 150 லாரிகள் மூலம் 15 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் 3 நாட்களாக ஆவின் டேங்கர் லாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இன்றுடன் ஆவின் பால் இருப்பு முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் நாளை முதல் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று மாநிலம் முழுவதும் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஆவின் நிர்வாகம் சார்பில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்?: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!
அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்