மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தாலிபான் பயங்கரவாதி...பாகிஸ்தான் ராணுவ சிறையில் இருந்து தப்பியோட்டம்!
2020-02-07@ 13:11:59

இஸ்லமாபாத்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலாவை துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதி இஷானுல்லா இஷான் பாகிஸ்தான் ராணுவ சிறையில் இருந்து தப்பியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த தேஹ்ரீக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளரும், ஜமாத் உல் அப்ரார் எனும் மற்றொரு பயங்கரவாத அமைப்பையும் மான இஷானுல்லா இஷான். இவர், கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் ராணுவப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 134 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் உயிரிழப்பு, ராவல்பிண்டி மற்றும் கராச்சி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் 9 வெளிநாட்டினர் கொலை, வாகா எல்லையில் தற்கொலைப்படைத் தாக்குதல், 2016ல் லாகூரில் ஈஸ்டர் திருநாளில் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 75 பேர் பலி மற்றும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சதிச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
குறிப்பாக, பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய் மீது கடந்த 2012ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் 2017ம் ஆண்டில் இஷானுல்லா இஷான், ராணுவத்திடம் சரணடைந்தார். இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை இஷான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், கடந்த ஜனவரி 11ம் தேதியே ராணுவ சிறையில் இருந்து தப்பி வெளியேறிவிட்டதாக இஷானுல்லா இஷான் ஆடியோ பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், கடந்த பிப்ரவரி 5, 2017ல் ஏற்படுத்தப்பட்ட 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான் சரணடைந்தேன். ஆனால், பாகிஸ்தான் அதிகாரிகள் அதை மீறி என்னையும், எனது குழந்தைகள் உள்பட குடும்பத்தையும் சிறை வைத்தனர். யாருடன் நான் ஒப்பந்தம் ஏற்படுத்தினேன் என்று விரைவில் தெரிவிப்பேன். அதில் குறிப்பிடப்பட்ட அம்சங்களையும் வெளியிடுவேன். தற்போது எனது குடும்பத்துடன் துருக்கியில் வசித்து வருகிறேன் என்று பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Tags:
மலாலா Taliban Terrorist Malala Yousafzai Pakistan Jail தாலிபான் தீவிரவாதி இஷானுல்லா இஷான் பாகிஸ்தான் சிறைமேலும் செய்திகள்
பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
அவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்
அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு
பாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.!!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்