5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்சே
2020-02-07@ 08:06:35

புதுடெல்லி: இலங்கை பிரதமர் ராஜபக்சே, 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஐந்து நாள் பயணத்தில் பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற விஷயங்கள் குறித்து, அவர் பேச்சு நடத்த உள்ளார். இலங்கையில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா வெற்றி பெற்றார். இதையடுத்து, அவரது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சே, பிரதமராக பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, நவம்பரில் இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் அரசுமுறை பயணமாக இன்று ராஜபக்சே இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் அவர் வாரணாசி, சாரநாத், புத்த கயா, திருப்பதிக்கு செல்கிறார். அடுத்த மாதம் 11ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருக்கிறார்.
Tags:
இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசு Sri Lankan Prime Minister முறை பயணம் இந்தியா இலங்கை Rajapaksa பிரதமர் மோடிமேலும் செய்திகள்
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசு அல்லது நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால் 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்: OTT தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்