அண்ணா நினைவு நாள் மதிமுக அமைதி பேரணி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
2020-02-04@ 00:31:02

சென்னை: அண்ணா நினைவு நாளையொட்டி மதிமுக சார்பில் அமைதி பேரணி நடந்தது. அண்ணா 51வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் நேற்று மாலை 4 மணியளவில் அமைதி பேரணி நடந்தது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, அண்ணா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரை வரை சென்றது. பேரணிக்கு துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேமூர்த்தி மரியாதை செலுத்தினர். அதேபோன்று, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு வைகோ மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் செய்திகள்
விவசாயிகள், நெசவாளர்களை பலவீனப்படுத்தி பணக்காரர்களை வாழ வைக்கிறது மோடி அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
சொல்லிட்டாங்க...
அதிமுகவில் 100% முற்றிலும் நிராகரித்துவிட்ட நிலையில் சசிகலாவின் சமாதி சபதம் நிறைவேறுமா? மதில்மேல் பூனையாக தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்
சசிகலாவின் விடுதலையால் எந்த தாக்கமும் ஏற்படாது: வைகைச்செல்வன், அதிமுக மூத்த செய்தித்தொடர்பாளர்
அதிமுகவில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும்: செந்தமிழன், அமமுக துணைப்பொதுச்செயலாளர்
மக்கள் சிரமப்பட்டு வரும்போது வரி வசூலிப்பதில் மோடி மும்முரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்