அண்ணா நினைவு நாள் மதிமுக அமைதி பேரணி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
2020-02-04@ 00:31:02

சென்னை: அண்ணா நினைவு நாளையொட்டி மதிமுக சார்பில் அமைதி பேரணி நடந்தது. அண்ணா 51வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் நேற்று மாலை 4 மணியளவில் அமைதி பேரணி நடந்தது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, அண்ணா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரை வரை சென்றது. பேரணிக்கு துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேமூர்த்தி மரியாதை செலுத்தினர். அதேபோன்று, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு வைகோ மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் செய்திகள்
ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது: டிடிவி தினகரன் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 6,7-ம் தேதிகளில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்ததா தேமுதிக?
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி அறிவிப்பு
சொல்லிட்டாங்க...
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்