கர்னல் பென்னிகுக் 179வது பிறந்தநாள்: நாளை அரசு விழாவாக கொண்டாட்டம்
2020-01-14@ 20:27:41

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக்கின் 179வது பிறந்தநாள் விழா, நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்தநாளான ஜனவரி 15ம் தேதியை, ‘பென்னிகுக் பொங்கலாக’ தென் தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். பென்னிகுக்கின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என விவசாய சங்கத்தினர், பொதுமக்கள், பெரியாறு அணை மீட்புக்குழுவினர் நீண்ட காலமாக அரசை வலியுறுத்தி வந்தனர்.கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளை (ஜன.15) கர்னல் ஜான் பென்னிகுக் 179வது பிறந்தநாள் விழா முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபம் பெயின்டிங் செய்யப்பட்டு, வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கலெக்டர், எஸ்பி கலந்து கொள்ள உள்ளனர். பென்னிகுக் பிறந்தநாள் முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளதால் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
தஞ்சை கல்லணை கால்வாயில் குப்பை தேக்கும் வலையை பராமரிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
தெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி பலியான மகன் உடலை மீட்டு தர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு
நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்-சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
அமராவதி பிரதான கால்வாயில் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றம்
உத்தமபாளையம் பேரூராட்சியில் பரவும் டெங்கு-சுகாதாரப்பணிகள் மோசம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்