செக் நாட்டு பக்தர்கள் சதுரகிரியில் தரிசனம்
2020-01-10@ 12:37:41

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த 41 பேர் நேற்றுதரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், பவுர்ணமி மற்றும் பிரதோஷத்தையொட்டி, கடந்த 8ம் தேதி முதல் நாளை வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை செக் குடியரசு நாட்டில் இருந்து 25 பெண்கள், 16 ஆண்கள் ஆன்மீக பயணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். தாணிப்பாறை கேட்டில் வனத்துறை ஊழியர்கள், இவர்களது உடமைகளை சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். மலைக்கோயிலில் தங்கியிருந்து சாமி தரிசனத்தை முடித்துவிட்டு இன்று கிளம்புகின்றனர்.
குழுவிற்கு தலைமை தாங்கிய செக் குடியரசின் தாமஸ் பைபர் கூறுகையில், ‘‘எங்களுடைய ஆன்மீக குழு இந்தியாவில் பல்வேறு கோயில்களில் சுற்றுப்பயணம் செய்து தரிசனம் செய்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே இரண்டு முறை சதுரகிரிக்கு வந்துள்ளோம். இது இயற்கை எழில் சார்ந்த இடமாக உள்ளது. சதுரகிரிக்கு வந்தால் எங்களுக்கு மனதளவில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளாக சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க வந்துள்ளோம். நாங்கள் ஆன்மீக பயணத்தின்போது மது, போதை பொருட்கள் பயன்படுத்த மாட்டோம். அசைவ உணவு உண்ண மாட்டோம். இந்துக்களின் வழிமுறைகளை கடைப்பிடித்து தரிசனம் செய்து வருகிறோம்’’ என்றார்.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தொகுதி 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு 548 பேரில் 186 பேர் மட்டுமே வாக்களிப்பு: கடந்த முறை 220 பேர் வாக்களித்தனர்
போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து மங்களூரு கடலில் மேலும் 3 மீனவர் உடல்கள் மீட்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
மேகாலயா முன்னாள் ஆளுநருக்கு கொரோனா கோவையில் சிகிச்சை
திருத்துறைப்பூண்டி தாலுகா கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் மூட்டைகள் சேதம்: மழையில் நனைந்து வீணானது
தஞ்சையில் நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!