சென்னையில் ஓடும் பேருந்தின் படியில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு
2019-12-11@ 11:52:42

சென்னை: சென்னையில் மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் பேருந்து நிலைய வாசலில் 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். வேளச்சேரியை சேர்ந்த குமார் என்பவரது மகன் சரண். இவர் தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மாநகர பேருந்தில் தனது நண்பர்களுடன் தி.நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். தி.நகர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழையும் போது படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அனைவரும் கீழே குதித்து கொண்டிருந்தனர். அப்போது மாணவன் சரண் என்பவரும் படியில் இருந்து கீழே குதிக்க முயற்சித்துள்ளார்.
அச்சமயம் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த சரண், பேருந்தின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பாண்டிபஸார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்போது பேருந்து நிலையத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் படியில் தொங்கி பயணம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இது மாணவர்களின் தவறா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல்: அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்
தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா: இன்று 775 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை..!
முதல் நாள் என்பதால் சில சிக்கல் இருந்தது: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை: விஜயபாஸ்கர் பேட்டி..!
கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான், தோல்வியில்லை: இதுவரை 3,000 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள் : நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பு
கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது : திருமாவளவன் வலியுறுத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்