கறம்பக்குடி அருகே வயல் கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
2019-12-11@ 10:24:05

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே வயல் கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி துவார் அருகே உள்ள கெண்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. விவசாயி இவருக்கு சொந்தமான பசுமாடு வழக்கம் போல மேச்சலுக்கு அப்பகுதி பொட்டல்வெளி பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் மாட்டை தேடியுள்ளனர். அப்போது அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய வயல் கிணற்றில் விழுந்து தவித்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னையா உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் சிங்கமுத்து தலைமையில் வீரர்கள் கிணற்றில் விழுந்த பசுவை கயிறுகட்டி உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.
Tags:
கறம்பக்குடிமேலும் செய்திகள்
ஊழல் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கோரி வழக்கு...! சட்ட திருத்தம் செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு
பைக்கில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்ட வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்: பாஜக பிரமுகர் மகன் உட்பட மூன்று பேர் கைது
செந்துறையில் அதிக வேகத்தில் சென்ற கனரக வாகனங்களை மறித்த இளைஞர்கள்
விருதுநகர் நகராட்சி மின்மயானம் பழுதால் திறந்த வெளியில் எரிக்கப்படும் சடலங்கள்-இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்
காரியாபட்டி அருகே புதிய சாலையின் இருபுறமும் விபத்து ஏற்படுத்தும் பள்ளம்
குடியிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-சப்.கலெக்டரிடம் முதியவர் கோரிக்கை
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!