போக்சோவில் வாலிபர் கைது
2019-12-11@ 01:12:00

தண்டையார்பேட்டை: பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் வசிப்பவர் மலர் (30). திருமணமானவர். அதே பகுதி பிளாட்பாரத்தில் வசிப்பவர் அருள் (25). இருவரும் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு பிளாட்பாரத்தில் மலர் தூங்கிக் கொண்டு இருந்தபோது, மது போதையில் அங்கு வந்த அருள், மலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திடீரென எழுந்த அவர் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து அருளை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து வடக்கு கடற்கரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அருளை கைது செய்தனர். இதன்பிறகு காவல்நிலையத்தில் இருந்த அருள், கைவிலங்குடன் தப்பினார். அவரை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று அருள் கைது செய்யப்பட்டார். விசாரணையில், மலரின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் போக்சோ சட்டத்தில் அருள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
சூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது
துபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்
மாங்காடு அருகே பரிதாபம்: கால்களை உடைத்து நாய் கொடூர கொலை: 3 பேருக்கு வலை
பொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை
மூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை
கஞ்சா கடத்தியவர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்