வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறல்
2019-12-10@ 00:20:58

நாங்குநேரி: நாங்குநேரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பெற்றோர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது பெய்த மழையால் பள்ளி வளாகத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது.
அருகில் உள்ள வயல்களில் இருந்து பூச்சிகள் மற்றும் விஷப்பாம்புகள் வெளியேற துவங்கியுள்ளன. நேற்று பிற்பகல் ஏழாம் வகுப்பு அறையில் விரியன் வகையைச் சேர்ந்த புல் விரியன் பாம்பு புகுந்தது. இதனைக்கண்ட மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காவலாளி மற்றும் ஆசிரியர் உதவியுடன் பாம்பை அடித்துக் கொன்றனர். இதையடுத்தே மாணவிகள் நிம்மதி அடைந்தனர்.
மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்