நானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்
2019-12-10@ 00:19:21

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி. இவனுக்கு தற்போது 18 வயது. இவன் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய பதிவுகளை போடுவது வழக்கம். இவன் கடந்த ஆகஸ்ட் மாதம் டேட் மாடர்ன் அருங்காட்சியகத்துக்கு சென்றுள்ளார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், அங்கு வந்திருந்த பிரான்ஸ் பெண் சுற்றுலா பயணியின் 6 வயது ஆண் குழந்தையை ஜான்டி தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான். இதைப்பார்த்து, அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டு துரத்தி உள்ளனர். ஆனால், யாரிடமும் பிடிபடாமல் ஓடிய ஜான்டி, அருங்காட்சியகத்தின் 10வது மாடிக்கு சென்று அங்கிருந்து குழந்தையை தூக்கி வீசியுள்ளான். இதில் அந்த குழந்தை 5வது மாடியின் கூரை மீது விழுந்து படுகாயமடைந்தது. மேலும், உடல் முழுவதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இன்னமும் அக்குழந்தை தீவிர சிகிச்சையில் உள்ளது. அக்குழந்தை அசையவோ, திரும்பி படுக்கவோ கூட முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், ஜான்டி பிரேவரியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரித்தபோது, ‘உலக அளவில் நான் பிரபலமாக வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு முட்டாளுக்கும் என்னை நிரூபிக்க வேண்டும் என்று கருதினேன். அதனால், குழந்தையை தூக்கிப்போட்டேன்’’ என்றான். அவனது வாக்குமூலத்தை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குற்றம் நடந்தபோது, ஜான்டிக்கு 17 வயது. இதனால் அ்ப்போது அவனைப்பற்றிய விவரம் வெளியிப்படவில்லை. தற்போது அவனுக்கு 18 வயது ஆகி உள்ளதால், அவனது விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜான்டி பிரேவரிக்கான தண்டனை வரும் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா
வழியனுப்பும் விழாவில் டிரம்ப் பிரார்த்தனை; கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி: இன்றிரவு அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் உருக்கம்
அமெரிக்க சுகாதாரத்துறை துணை செயலாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை நியமனம் செய்தார் ஜோ பைடன்
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷியா அறிவிப்பு : உலக நாடுகள் ஆச்சரியம்
வரும் காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும்!: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள பிளிங்கன் நம்பிக்கை..!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!