பலாத்கார குற்றவாளிகளால் எரித்து கொல்லப்பட்ட உன்னாவ் இளம்பெண் இறுதிச்சடங்கு நடந்தது: குடும்பத்தினர் திடீர் போராட்டம்
2019-12-09@ 00:15:20

உன்னாவ்: உன்னாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களால் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் கடந்தாண்டு இளம்பெண் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்களில் இரண்டு பேர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். கடந்த வியாழன்று நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் அந்த இளம்பெண்ணை கூட்டாளிகளுடன் சேர்த்து வழி மறித்த இவர்கள், அவரை தாக்கி தீ வைத்து எரித்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதனால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த இளம்பெண்ணின் சடலம், உன்னாவில் உள்ள சொந்த ஊருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்து தங்கள் மகளின் சாவுக்கு பதில் கூறினால் மட்டுமே இறுதி சடங்குக்கு அனுமதிப்போம் என குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
உயிரிழந்த இளம்பெண்ணின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர். லக்னோ காவல்துறை ஆணையர் முகேஷ் மெஷ்ராம், இளம்பெண்ணின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இறுதிச் சடங்கை நடத்த குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதிச் சடங்கு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்,
முன்னதாக, நேற்று முன்தினம் உத்தரப் பிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் கமல் ரானி வருண்ஆகியோர் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்போது, ₹25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் உறுதி அளித்தனர்.
குற்றவாளிகளுடன் பாஜ.வுக்கு தொடர்பு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பலியான உன்னாவ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், ``உபி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அரசு தவறி விட்டது. உன்னாவ் பெண்ணுக்கு நீதி வழங்க முடியாமல் போனதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுடன் பாஜ தலைவர்களுக்கு தொடர்புள்ளது,’’ என்று குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி..! நாட்டு மக்கள் தயக்கத்தில் இருந்து வெளிவர உதவும்: எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு...!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பீகார் அரசு: மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்....முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!!!
ஆளுங்கட்சியின் முறைகேடு, அராஜகங்களை கண்டித்து திருப்பதி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா!: போலீசாரிடம் ஆவேசம்..!!
“தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லை”... புதுச்சேரி செவிலியரை புன்னகையுடன் பாராட்டிய பிரதமர் மோடி...!..
பக்க விளைவுகள் மிகக் குறைவு: எம்.பி., எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினரும் கொரோனா தடுப்பூசி போட்டுகங்க: மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்