ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரிப்பு: சென்னையில் வெங்காயத்தின் விலை ரூ.40 வரை குறைவு...இல்லத்தரசிகள் மகிழச்சி
2019-12-08@ 14:21:19

சென்னை: சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரக்கூடிய வெங்காயம் வரத்து சரிந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்தது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.180 வரைக்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.170 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்துக்கு. 70 லாரிகளில் தினமும் கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக வெறும் 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்தது. வெங்காயத்தின் விலை உயர்வு எதிரொலியாக உணவகங்களில் வெங்காயம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததாலும், பொதுமக்கள் பயன்பாட்டை குறைத்ததாலும், சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று மொத்த விலையில் 170 ரூபாய் வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130 முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட நடுத்தர வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெங்காயத்தின் அளவு மற்றும் தரத்தை கொண்டு 100 ரூபாய்க்கு குறைவாகவும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமும், கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. நேற்று 160 ரூபாய், 170 ரூபாய் என விற்கப்பட்ட அதன் விலை இன்று 130 ரூபாய், 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காய விலை குறைவுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததும், பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்தது உள்ளிட்டவையே காரணம் என்று கூறியுள்ள வியாபாரிகள், வரும் நாள்களில் அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர் காமராஜ் பேட்டி:
மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், எகிப்து, துருக்கி நாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின் வெங்காயம் விலை கட்டுக்குள் வரும் எனவும் தெரிவித்தார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது நிரந்தரமான விலையேற்றமாக இருக்கக்கூடிய பொருள் அல்ல எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான், தோல்வியில்லை: இதுவரை 3,000 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள் : நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பு
கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது : திருமாவளவன் வலியுறுத்தல்
‘‘நீங்க பேசுங்க... இல்லை.. நீங்க பேசுங்க..’’ ஓபிஎஸ், இபிஎஸ் பனிப்போர் பகிரங்கம்
தமிழுக்கு ரூ.22 கோடி.. சமஸ்கிருதத்துக்கு ரூ.643 கோடியா? : கே.எஸ்.அழகிரி காட்டம்!
“மார்கழி மழையால்” பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவித்திடுக : மு.க.ஸ்டாலின்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்