குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
2019-12-08@ 13:27:43

குஜிலியம்பாறை :குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த சாரைப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நேற்று இங்குள்ள மகப்பேறு சிகிச்சை கட்டிடம் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ள பைப் அருகே பாம்பு புகுந்தது. இதனால் நோயாளிகள், உடனிருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை அலுவலர்களிடம் தெரிவித்தனர். குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் மருது தலைமையில், தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பிவிசி பைப்பிற்குள் சென்ற பாம்பை லாவகமாக மடக்கி உயிருடன் பிடித்தனர். அது 6 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு என தெரியவந்தது. பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
உலக அரங்கில் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியுடன் நிறைவு..!
வரும் 23ம் தேதி கோவை வருகை ‘மெகா ரோடு ஷோ’ ராகுல் காந்தி பங்கேற்பு தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்..!
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
முனியாண்டி கோயில் திருவிழா :100 கிடாய்கள் வெட்டி அன்னதானம்
மீண்டும் முதல்வர் எடப்பாடி தானாம் : கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள்: விலை உயர்வு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்