உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்திமொழி கற்பிக்கப்படாது: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
2019-12-08@ 02:13:58

சென்னை: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படாது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்பில், பிஎச்டி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் திங்கட்கிழமையன்று துவக்கி வைத்தார். பின்னர், அமைச்சர் பாண்டியராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஓர் உலக மொழி ,ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கப்படுவதாக கூறினார். மேலும் இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்திக்கு பதிலாக தெலுங்கு கற்பிக்க முடிவு செய்திருக்கிறோம். ஏற்கனவே முடிவு செய்தபடி பிரெஞ்ச் மொழியைக் கற்பிப்பது தொடரும். இந்தி கற்பிக்க ஒதுக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் தெலுங்கு கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்
தேர்தல் ஆணையம் உத்தரவு: மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட்: கமல் ஹாசன் நன்றி
தமிழ்நாட்டில் வருங்காலத்தில் பாஜ பெரிய சக்தியாக வரும்: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு
பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
முழுமையான பரிசோதனை தரவுகள் பெறாமல் கொரோனா தடுப்பூசிக்கு அவசரப்படுவது ஏன்? கே.பாலகிருஷ்ணன் கேள்வி?
பேஸ்புக் சிங்கள அரசின் கைக்கூலி: வைகோ கடும் கண்டனம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்