போராட்டங்களில் ஈடுபடுவதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி பேச்சு
2019-11-24@ 00:01:37

சென்னை: போராட்டங்களில் ஈடுபடுவதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு பேசினார். திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதிதாக ரூ.19.12 கோடியில் சுமார் 8 ஆயிரம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இணைப்புக் கட்டிடம் மற்றும் ரூ.5.52 கோடியில் நீதிபதிகளின் குடியிருப்புகள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் முன்னிலை வகித்தார்.விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.அவர் பேசுகையில், ‘‘வழக்கறிஞர்கள் வாதிடும்போது முழுத்திறனையும் வெளிப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் குறுக்கு வழிகளில் அணுகக் கூடாது. நீதிமன்றங்களில் வழக்குகளை திசை மாற்றுவதையும், தேவையில்லாமல் வாதிடுவதையும் தவிர்க்க வேண்டும். வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது, பொதுமக்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்றங்கள் மட்டும் இணைந்தால் போதாது. நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் பேசுகையில், ‘‘வழக்கறிஞர்கள் எவ்விதமான புகாருக்கும் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடாமல், தொழிலை தெய்வமாக நினைத்து செயல்பட வேண்டும்’’ என்றார்.விழாவில், எஸ்.பி., அரவிந்தன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரஸ்வதி, வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.தாமோதரன், வி.முரளி, கே.ஜி.புருஷோத்தமன், ஆர்.ரகுபதி, எஸ்.கே.ஆதாம், கே.கார்த்திக், எம்.நித்தியானந்தம், டி.ஜான்பால் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில், குற்றவியல் முதன்மை நீதிபதி ஜா நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் இன்று : தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஸ்டாலின், கமல் வலியுறுத்தல்
தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை..! திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை தகவல்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்