மேடவாக்கத்தில் கஞ்சா விற்ற ஒடிசா பெண் பிடிபட்டார்
2019-11-22@ 00:17:33

வேளச்சேரி: மேடவாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒடிசா பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேடவாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில் பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் அதிகளவில் வந்து செல்வது தெரிந்தது. உடனே, அந்த வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிந்தது.
அந்த வீட்டில் குடியிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது, ஒடிசாவை சேர்ந்த பென்னி (30) என்பதும், வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை
மூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை
கஞ்சா கடத்தியவர் கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது
தங்கம் கடத்திய 2 பேர் கைது
சிக்கன் பிரைட் ரைசுக்கு பணம் கேட்டதால் மிரட்டல் ‘அமித்ஷா பிஏவுக்கு போன் போடவா... ஆயிரம் பேரை இறக்குவோம்...’ திருவல்லிக்கேணி பாஜ பிரமுகர் கைது
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்