டெல்லி வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள விற்பனை வரி அலுவலக கட்டடத்தில் திடீர் தீவிபத்து!
2019-11-21@ 10:40:28

புதுடெல்லி: டெல்லியில் வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மத்திய டெல்லியில் வருமான வரித்துறை அலுவலகமானது அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 13வது மாடியில் விற்பனை வரி அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 8.30 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி தீயணைப்பு நிலையத்தின் பிராந்திய தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அட்வால் தலைமையிலான 5 தீயணைப்பு வீரர்கள், 8.55 மணியளவில் தியை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய டெல்லி தீயணைப்பு துறை இயக்குநர் விபின் கான்டல், 13வது மாடியில் உள்ள ஒரு சிறையில் தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. புகை வெளிவந்ததை அடுத்தே, தீவிபத்து ஏற்பட்டுள்ளது கண்டறிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்ட அறையில், சில அலுவலக பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தீவிபத்து ஏற்பட்டிருந்தபோது, அந்த அறையானது மூடப்பட்டிருந்தது, அலுவலகமும் திறக்கப்படவில்லை, என்று கூறியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து பேசிய தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அட்வால், தீயைணப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் 10 நிமிடங்களில் அணைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தீவிபத்து ஏற்பட்ட வளாகம் முழுவதும் புகைசூழ்ந்து காணப்படுகிறது.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்