ஜிஎஸ்டி இழப்பீடு தாமதம் 5 மாநிலங்கள் கொந்தளிப்பு
2019-11-21@ 03:04:55

புதுடெல்லி: ஜிஎஸ்டி இழப்பீடு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்காமல் இருப்பதற்கு, எதிர்க்கட்சிகள் ஆளும் 5 மாநில நிதியமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் 14 சதவீதத்துக்கு கீழாக குறையும்போது, அதற்கான இழப்பீடு தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் டெல்லி, மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இதில் 5 மாநிலங்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டிய இழப்பீடு தொகை 10 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு 1,500 கோடியும், கேரளாவுக்கு 1,600 கோடியும், பஞ்சாப் மாநிலத்துக்கு 2,100 கோடியும், டெல்லிக்கு 2,355 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளதாக அந்த மாநில நிதியமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில் சதம் அடித்த முருங்கைக்காய்: உச்சமடையும் கத்தரிக்காய் விலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்