ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: இருநாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை
2019-11-17@ 15:41:38

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசினார். தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாரோ கோனோவைச் சந்தித்தார். அப்போது; அப்போது பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் பலி: 73 பேர் காயம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல்
அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
புதிய கொரோனா 60 நாட்டில் பரவியது
அலிபாபா தலைவர் ஜாக் மா வீடியோவில் தோன்றி பேச்சு: மாயத்துக்கு காரணம் கூறாமல் மவுனம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!