சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு
2019-11-11@ 19:26:05

சாயல்குடி: முதுகுளத்தூரில் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக பஸ்ஸ்டாண்ட் சாலை, பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அவ்வப்போது சாலைகளில் கால்நடைகள் மிரண்டு ஓடுவதால், பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில்1,364 கோடி மோசடி: தவாக தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு
சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு கடிதம்: அஞ்சல் துறை தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்
பாஜ, ஆர்.எஸ்.எஸ் சதி திட்டம் எடுபடாது திமுக என்றுமே இந்துக்களுக்கு எதிரி அல்ல: மு.க.ஸ்டாலின் பேச்சு
வரும் 27ம் தேதி சசிகலா விடுதலை அதிமுகவில் திடீர் சலசலப்பு: தேர்தலுக்கு முன் கட்சி உடையுமா?
தமிழ் மொழி, கலாச்சாரத்தை மத்திய அரசு நசுக்க திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு: ஆவடி நாசர் தலைமையில் நடந்தது
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்