நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம்
2019-11-09@ 01:02:29

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த தினேஷ்குமார் (16), ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர், நேற்று தேர்வு எழுதிவிட்டு, தனது நண்பர்கள் 15 பேருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சென்று, கடற்கரைக்கு சென்றார். அங்கு, கடலில் மாணவர்கள் குளித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய தினேஷ்குமார் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மாயமான தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் அடிக்கடி கடலில் குளிக்க சென்று உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. எனவே, காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
2021 சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் திமுக ஆட்சி; அசாம், புதுச்சேரி- பாஜக கூட்டணி, கேரளா- கம்யூனிஸ்ட்...ஆங்கில தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தகவல்.!!!
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்; முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 556 பேர் பாதிப்பு: 532 பேர் குணம்; 03 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் த.வா.க; ம.வி.க; ஆதித்தமிழர் பேரவை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.!!!
திருநின்றவூர் பேரூராட்சியில் எங்கெங்கு காணினும் குப்பை நோய்பிடியில் தவிக்கும் மக்கள்
போதைபொருள் மையமாக மாறிய கோயம்பேடு பேருந்து நிலையம்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்