விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம
2013-06-30@ 02:33:31

பவானி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி அல்டமாஸ் கபீர் வரும் ஜூலை மாதம் 18ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வரும் இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள காடப்பநல்லூர். காவிரிக் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது விடாமுயற்சி, கடமை தவறாமை, நேர மேலாண்மை, அயராத உழைப்பால் இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீதிபதி சதாசிவத்தின் தந்தை பழனிச்சாமி கவுண்டர். தாய் நாச்சாயம்மாள். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் சுப்பிரமணியம், வேலுச்சாமி, ஆச்சாயி, அலமேலு. தந்தை இறந்து விட்டார். இதில், சகோதரர்கள் இருவரும் அதே கிராமத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நீதிபதி சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி. மகன்கள் சீனிவாசன், செந்தில். ‘தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்’ தனது மகன் சதாசிவம், உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக வரும் 19ம் தேதி பதவியேற்பது குறித்து அவரது தாய் நாச்சாயம்மாள் கூறுகையில், ‘அடிப்படை வசதி குறைந்து காணப்பட்ட இக்கிராமத்திலிருந்து சிங்கம்பேட்டை பள்ளியில் சென்று உயர்நிலைக் கல்வி பெற்று, மேல்நிலை கல்வியை ஈரோடு சிஎன் கல்லூரியில் படித்தார். தொடர்ந்து, சிவகாசியில் கல்லூரிக் கல்வியையும், சென்னையில் சட்டக் கல்லூரியிலும் படித்தார். பள்ளிப் பருவம் முதலே படிப்பில் அதிக ஆர்வத்துடன் காணப்பட்ட சதாசிவம், இப்பதவியை அடைந்ததன் மூலம் இக்கிராமத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்‘ என்றார். இவரது சகோதரர்கள், மகன்கள், உறவினர்கள் மட்டுமின்றி இக்கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நடிகை பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தடயவியல்; பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை - மேட்டுப்பாளையம், தாம்பரம் உள்ளிட்ட 4 சிறப்பு ரயில்களை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பு
நாலுமாவடியில் நாளை மறுநாள் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா
குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் வாய்ந்தது; குன்னூர் பர்லியார் பண்ணையில் துரியன் பழம் சீசன் துவங்கியது
இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!