மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு
2019-11-05@ 00:03:14

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பையடுத்து ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து தொடர்ந்து 3 நாட்களாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை அது 9,500 கனஅடியாக சற்று குறைந்தது. இருப்பினும், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,500 கனஅடியானது.
இதையடுத்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு, நேற்று காலை 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு -மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் 400 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
மேலும் செய்திகள்
தெற்கு ரயில்வேக்கு 13 செட் புதிய ரயில் பெட்டிகள் ஓதுக்கீடு திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே நேரடி ‘மெமு’ ரயில்கள்: பயணிகள் சங்கம் கோரிக்கை
பொன்மலை பணிமனையில் தயாரான புதிய வேகன்கள் அனுப்பி வைப்பு
சாம்பவர்வடகரை காவல் நிலையத்தில் விதிமுறைகளை மீறி மரங்களை வெட்டி கார்டன் அமைப்பு?: தலைமை செயலாளரிடம் பரபரப்பு புகார்
‘கவலையை மறக்க வந்தா கஷ்டப்படுத்தறாங்கப்பா’ குவார்ட்டருக்கு 5 ரூபாய் கூடுதல் வசூல் டாஸ்மாக்கை கண்டித்து ‘குடிமகன்’ மறியல்
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஜி.எஸ்.டி., பெருமுதலாளிகளால் நசிவுப்பாதைக்கு செல்லும் ஜவுளித்துறை: கடும் அதிருப்தியில் தொழில் முனைவோர்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்