அரை இறுதியில் பிளிஸ்கோவா
2019-11-02@ 00:06:07

ஷென்ஷென்: சீனாவில் நடைபெறும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். ஊதா பிரிவு லீக் ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய ஹாலெப் 6-2 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஹாலெப்பின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பிளிஸ்கோவா 6-0, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தார். நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஆஷ்லி பார்தி (ஆஸி.), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
மேலும் செய்திகள்
முஷ்டாக் அலி டி20 அரியானாவை வீழ்த்தி பரோடா த்ரில் வெற்றி
உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் ஸ்ரீகாந்த், சிந்து தோல்வி
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் முன்னிலை
முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!