தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு: பாரம்பரிய விவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதிய சட்டத்தால் ஆபத்து: பி.ஆர்.பாண்டியன்
2019-10-30@ 11:41:07

சென்னை: தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவே தனிச்சட்டம் உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என கூறினர். தனியார் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் என்பது மத்திய அரசின் சூழ்ச்சி திட்டம் என விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் மூலம் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிட்டது என தெரிவித்தார். பெரு நிறுவனங்களிடம் விவசாய நிலங்களை ஒப்படைக்கவே குத்தகை சட்டம் வழி வகுக்கும் என கூறினார். விவசாயிகளின் கருத்தை கேட்காமல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது தவறு என தெரிவித்தார்.
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி ஒப்பந்த சாகுபடி சட்டம் பற்றி விவாதிக்க வேண்டும் எனவும் கூறினார். குத்தகை சட்டம் வந்தால் விவசாய தானியங்களை அரசு கொள்முதல் செய்வது நிறுத்தப்படலாம் என கூறினார்.விவசாயிகள் விலை பொருட்களை பெரு நிறுவனங்களிடம் விற்கப்படும் சூழல் ஏற்படலாம் என கூறினார். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த சாகுபடி குத்தகை சட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் பெரு நிறுவனங்கள் தரும் விதைகளை மட்டுமே சாகுபடி செய்ய நேரிடும் என கூறினார். தமிழ்நாட்டின் பாரம்பரிய விவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதிய சட்டதால் ஆபத்து நேரிடும் என்று தெரிவித்தார். பாரம்பரிய விவசாய முறைகளையும், விதைகளையும் அழிக்க வேண்டாம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!!!!
நக்சல்களின் கண்ணிவெடி தாக்குதலில் வீரமரணம் எய்திய தமிழக ராணுவ வீரர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : முதல்வர் பழனிசாமி
கடன் வாங்காத மாநிலமே இல்லை: பல்வேறு சோதனைகளைத் தாண்டி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன்...முதல்வர் பழனிசாமி பேட்டி.!!!
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!
அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!