தென் மண்டல ஃபிஸ்ட்பால் தமிழ்நாடு அணிகள் சாம்பியன்
2019-10-27@ 00:07:50

சென்னை: தென் மண்டல அளவிலான முதலாவது தேசிய ஃபிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இதில் தென் மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபர், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் தமிழ்நாடு 11-8, 11-00 என்ற நேர் செட்களில் புதுச்சேரியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் பிரிவில் தெலுங்கானா 3வது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும் பிடித்தன.
பெண்கள் பிரிவுக்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு 8-11, 11-8, 11-8 என்ற செட்களில் புதுச்சேரியை போராடி வென்றது. இந்தப் பிரிவில் கேரளா 3வது இடத்தையும், தெலுங்கானா 4வது இடத்தையும் பெற்றன.சிறந்த வீராங்கனைக்கான விருது தமிழகத்தின் பியூலா ஜாய்ஸ், சிறந்த வீரருக்கான விருது கேரளாவின் சனால் ஆகியோர் பெற்றனர்.
மேலும் செய்திகள்
அமித்ஷா கையில் தலையாட்டி பொம்மை: ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்
தொடரும் இழுபறி!: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை..!!
பாலியல் சர்ச்சை விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு உதவிய உயர் அதிகாரிகள்: முதல் தகவல் அறிக்கையில் அம்பலம்
சட்டமன்ற தேர்தல் 2021!: அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல்...ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவிப்பு..!!
3 மாதங்களில் 225 உயர்வு: காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்