ஆளுநருக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு மேற்கு வங்க அரசு கடும் எதிர்ப்பு: முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி கடிதம்
2019-10-24@ 00:06:42

கொல்கத்தா: ‘மேற்கு வங்க ஆளுநரின் பாதுகாப்பை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்க கவர்னராக ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 30ம் தேதி பொறுப்பேற்றார். அவரது பாதுகாப்பை மாநில அரசு நியமிக்கும் போலீசாரே ஏற்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 15ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், `ஆளுநர் தன்கரின் பாதுகாப்பு, மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்) படையிடம் ஒப்படைக்கப்படும்,’ என அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘ஆளுநரின் பாதுகாப்பை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இந்த முடிவை எடுக்கும் முன்பு மாநில அரசிடம் ஆலோசனை நடத்தாதது ஏன்? மாநில அரசியலமைப்பின் தலைவர் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பு அளிப்பது மாநில அரசின் கடமையாகும். அவருக்கு மாநில அரசு `இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில், மாநில அரசை ஆலோசிக்காமல் திடீரென அதை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைத்தது ஏன்? என விளக்கம் அளிக்க வேண்டும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாநில போலீசின் மூத்த அதிகாரிகளும், சிஆர்பிஎப் அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஆளுநரின் பாதுகாப்பை சிஅர்பிஎப் ஏற்பதில் சிக்கல் நிலவுகிறது. இதுவரை, ஆளுநரின் பாதுகாப்பை சிஆர்பிஎப் ஏற்கவில்லை.இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், `ஜதாவர் பல்கலைக் கழகத்துக்கு ெசன்ற ஆளுநர் வாகனம் சிறை பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பாபுலால் சுப்ரியோ அவரை மீட்டார். இதையடுத்து, ஆளுநரின் பாதுகாப்பை இசட்டில் இருந்து இசட் பிளசுக்கு மாற்ற உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’ என கூறின.
மேலும் செய்திகள்
திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி ட்வீட் !!
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!