சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு
2019-10-21@ 14:37:07

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் விளைவாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு மட்டும் 2015 நவம்பர் 15-ல் தொடங்கிய பாதுகாப்பு ஒவ்வொரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி உடன் இந்தப் பாதுகாப்பு முடிகிறது. இந்நிலையில் இதனை நீட்டிப்பது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் நீதிமன்ற பாதுகாப்பை ஒவ்வொரு ஆண்டாக நீட்டிப்பதற்கு பதிலாக நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும்.
சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு இல்லாத உயர் நீதிமன்ற வளாகத்தில் சில அசம்பாவிதங்கள், போராட்டங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. எனவே உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதில் தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டாக நீட்டிப்பதால் வீரர்களை இடமாற்றம் செய்வதில் மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் படிப்பு தொடர்பான விசயங்களும் பாதிக்கப்படும் என தெரிவித்தது. இறுதியில் இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்.எஃப் பாதுகாப்பு கொடுக்கப்படும். சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு ஆராய்ந்து முடிவெடுக்கவும் அறிவுறுத்தி இந்த வழக்கை மூன்று மாதங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகள்
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை முன்னிட்டு காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; 234 தொகுதிக்கும் தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு: அரசிதழிலும் வெளியிடப்பட்டது
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது
தொடர்ந்து 60 தொகுதி கேட்டு பிடிவாதம்: பாஜகவை பழி தீர்க்க அதிமுக புதிய திட்டம்.!!!
பேரறிவாளன் விவகாரத்தில் நடப்பது என்ன?.. உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!