கிருஷ்ணகிரி, தர்மபுரியில் நகைகள் புதைப்பா? திருச்சி வங்கி கொள்ளையில் மேலும் 3 பேர் கைது: இரு மாநில போலீசார் முகாமிட்டு விசாரணை
2019-10-21@ 01:03:36

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைகடையில் கடந்த 2ம் தேதி அதிகாலையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கணேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி, மணகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை கும்பல் தலைவன் முருகன், சுரேஷ் ஆகியோர் சரணடைந்தனர். இதையடுத்து, முருகனை போலீஸ் காவலில் எடுத்த பெங்களூரு போலீசார், தமிழகம் அழைத்து வந்து திருவெறும்பூர் காவிரிக்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அந்த நகைகள் பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதனிடையே பெங்களூரு போலீசார் கணேசனின் அண்ணன் கோபால், உறவினர் கண்ணன் ஆகியோரை கைது செய்து பெங்களூரு அழைத்து சென்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மேலும் 3பேரை நம்பர் 1 டோல்கேட் போலீசார் கைது செய்தனர். அவர்களை திருச்சிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் முருகன் கிருஷ்ணகிரி, தர்மபுரியில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் முருகனுக்கு அங்கு கூட்டாளிகள் இருக்கலாம். அல்லது அந்த பகுதியில் நகைகளை புதைத்து வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக பெங்களூரு மற்றும் திருச்சி தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.சுரேஷ் சுற்றித்திரிந்த லோடு வேன் பறிமுதல் நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு திருவண்ணாமலையில் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சுரேஷ் திருவண்ணாமலையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று நேற்று முன்தினம் இரவு திருச்சி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தங்க நகைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், சந்தேகம் வராமல் இருப்பதற்காக லோடு வேனில் சுற்றித்திரிந்த கொள்ளையன் சுரேஷ், திருவண்ணாமலையில் தங்கியிருந்த இடத்தில் வேனை நிறுத்தி வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
மது அருந்தும்போது மோதல் பைக்குகள் தீ வைத்து எரிப்பு
டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை மிரட்டி ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: 2 பேர் கைது
வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி
கர்ப்பிணி தற்கொலை ஆர்டிஓ விசாரணை
நடுரோட்டில் மனநலம் பாதித்த வாலிபர் ரகளை
30 நிமிடத்தில் ரூ.3,000 சம்பாதிக்கலாம் : மோசடி கும்பல் 12 பேர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்