தலைமை அஞ்சலகத்தில் 29ம் தேதி குறைதீர் முகாம்
2019-10-21@ 00:51:57

சென்னை: அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் வரும் 29ம் தேதி பயனாளிகள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரி கனகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் வாயிலாக தபால் சேவைகள் அதாவது மணியார்டர், பதிவு தபால், சேமிப்பு வங்கி முதலிய சேவைகளை பெற்றுவரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் வாயிலாகவோ அல்லது மின்அஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) வாயிலாகவோ வரும் 26ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை-600 002 என்ற முகவரிக்கு ‘குறைதீர்வு முகாம்’ என்ற தலைப்பில் அனுப்பி வைக்கலாம். மேலும், 29ம் தேதி மாலை 3 மணியளவில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் குறைதீர் முகாமிலும் பயனாளிகள் நேரில் வந்தும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
1500 பணத்துக்காக ஆபாசமாக பேட்டி அளித்த பெண்ணை கைது செய்யாதது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி
தமாகா மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்: ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
தொழில் நஷ்டத்தால் வியாபாரி குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை: மனைவி, மகள் பரிதாப சாவு: வியாபாரி கவலைக்கிடம்
சர்வதேச கண்காட்சியுடன் ஜோயாலுக்காஸ் பொங்கல் பரிசு திருவிழா
விதிமுறைகளை மீறி செயல்பட்டவை கடன் தரும் 30 ஆப்ஸ்களை நீக்கியது கூகுள் நிறுவனம்
ஏகனாம்பேட்டை ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்