திண்டிவனத்தில் பரபரப்பு அமைச்சர் சண்முகம் வீட்டில் தங்கை மகன் தற்கொலை
2019-10-07@ 00:42:45

திண்டிவனம்: திண்டிவனத்தில் அமைச்சர் சண்முகம் வீட்டில் தங்கையின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் தெருவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு அமைந்துள்ளது. அமைச்சரின் பாதுகாப்பில் அவரது தங்கை வள்ளி-இளங்கோவன் ஆகியோர் மகன் லோகேஷ் குமார் (26) வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.நேற்று முழுவதும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, அமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு குளியலறை கதவுக்கு மேல் உள்ள ஸ்கிரீன் தொங்கவிடும் கம்பியில் துண்டைக்கட்டி லோகேஷ்குமார் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடல், அமைச்சர் சண்முகம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கலெக்டர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லோகேஷ், கடந்த 6 மாதத்துக்கு முன்புதான், ஆஸ்திரேலியாவில் இருந்து திண்டிவனம் திரும்பினார். சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து முடித்துள்ளார். தற்சமயம் வேலைக்கு எங்கும் செல்லவில்லை. அமைச்சரின் பாதுகாப்பில் இருந்து வந்தார். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ரோஷணை போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைப்பு
காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!!
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு
ஆல் பாஸ் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!