போச்சம்பள்ளியில் பெயர்ந்து விழுந்த வணிக வளாக மேற்கூரை: வியாபாரிகள் அச்சம்
2019-10-02@ 10:21:28

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி தாலுகா வணிக வளாக கடையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். போச்சம்பள்ளியில் கடந்த 2001ம் ஆண்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, 37 வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. இந்த பஸ் நிலையத்திற்கு சென்னை, பாண்டிசேரி, சேலம், திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு போச்சம்பள்ளி வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் ஓட்டல் கடை, டீக்கடை, பழக்கடை, உரக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வணிக வளாகத்தில் ஜெகதீசன் என்பவர் உரக்கடை வைத்துள்ளார்.
நேற்று மதியம் வீட்டிற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் கடையில் இல்லாத நேரத்தில் மேற்கூரை விழுந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளாகவே வணிக வளாக கடைகள் சிதிலமடைந்துள்ளது. இதுகுறித்து பர்கூர் பிடிஓவிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கு பிறகாவது கடைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகள்
உதகை அருகே காட்டுயானை ஒன்று காத்து கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட நிற்கிறது !
மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் !
ஜன.20ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி
சென்னை காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் விரிவாக்கம் கார்ப்பரேட் கொள்ளை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி
சேலம் மாவட்டம் ஆத்தூர் வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை
டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு
குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு
சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு: கமல்ஹாசன் பேச்சு..!
ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு !
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி 2-ம் பாதுகாப்பானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்