உலக பாக்சிங் பைனலில் அமித் பாங்கல்
2019-09-21@ 02:25:40

மாஸ்கோ: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் வசப்படுத்தி உள்ளார். ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்து வரும் இந்த தொடரின் ஆண்கள் 52 கிலோ எடை பிரிவு அரை இறுதியில், கஜகஸ்தானின் சாகென் பிபோஸினோவுடன் நேற்று மோதிய பாங்கல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக பாக்சிங் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பாங்கலுக்கு கிடைத்துள்ளது.
இன்று நடைபெறும் பைனலில் அவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஷாகோபிதின் ஸாய்ரோவை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார். வெண்கலம் வென்றார் கவுஷிக்: ஆண்கள் 63 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் களமிறங்கிய இந்தியாவின் மணிஷ் கவுஷிக் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் கியூபா வீரர் ஆண்டி கோம்ஸ் குரூஸிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்