20 கோடி செலவு செய்ததை கேள்வி கேட்ட அரசால் சினிமா ஷூட்டிங் தளமாகிறது பொதுப்பணித்துறை அலுவலகம்: அதிகாரிகளின் நடவடிக்கையால் சர்ச்சை
2019-09-20@ 00:17:15

சென்னை: 20 கோடி செலவு செய்ததை தமிழக அரசு கேள்வி கேட்டதால், பொதுப்பணித்துறை அலுவலகத்தை சினிமா ஷூட்டிங் விட்டு வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ₹3 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாத நிலையில், கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டும், மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் இருந்தது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நூற்றாண்டு பழமையான கட்டிடத்தை புனரமைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் முதலில் 2 கோடி செலவில் இப்பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த கட்டிட புனரமைப்பு மட்டுமின்றி அதிகாரிகளுக்கு சோபா, டிவி வாங்குவது, புதிதாக எல்இடி பொருத்துவது மற்றும் அவர்களது அறையை அழகுப்படுத்துவது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, பராமரிப்பு பணி நிதியில் இருந்து செலவழிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், ₹20 கோடி ஆக பராமரிப்பு செலவு அதிகரித்தது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனிடம் விளக்கம் கேட்டது. மேலும், அதிக செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை சினிமா ஷூட்டிங் விடுவதற்கு பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வருவாய் ஈட்ட வழி வகை செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், நூற்றாண்டு பழமையான கட்டிடமாக உள்ள நிலையில், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசிய கோப்புகள் பராமரிக்கப்பட்டு வரும் சூழலில் கட்டிடத்தை சினிமா ஷூட்டிங் விட முடிவு செய்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எழிலக வளாக கடை வாடகை உயர்வு
எழிலக வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில், ஓட்டல், பழக்கடை, ஸ்வீட் கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு வாடகை ₹500 முதல் ₹1,500 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. 300 அடி கடைக்கு ₹8 ஆயிரமும், அதற்கு மேல் இருந்தால் அதற்கேற்ப வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாடகை ஏப்ரல 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இந்த வாடகையை முன்தேதியிட்டு தரவும் அவர்கள் வாடகை தாரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!
அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு
திமுக தலைமையில்தான் புதுவையில் கூட்டணி : ஜெகத்ரட்சகன் எம்பி திட்டவட்டம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்