ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவம்: 12 சடலங்கள் மீக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் உடல்கள் மீட்பு
2019-09-17@ 10:28:20

அமராவதி: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தேவிபட்டனம் கண்டி போச்சம்மா கோவிலுக்கு படகு சவாரி இயக்கப்பட்டது. ஆற்றில் 61 பேரை ஏற்றிய படகு கச்சளூரு பகுதியில் வரும் போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் பலர் பாதுகாப்பு உடைகள் இல்லாதால் தண்ணீரில் மூழ்கினர். விபத்து நடந்த படகில் 11 ஊழியர்கள் உள்பட 61 பேர் பயணித்தனர். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த தலா 30 பேர் இரண்டு அணிகளாக விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களில் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் இதுவரை, 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதையடுத்து எஞ்சியவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படை ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், யாரேனும் உயிருடன் மீட்கப்படுவார்களா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
கிழக்கு கோதாவரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிராத்திப்பதாவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விபத்தினை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம் முழுவதும் படகு சேவைகளை உடனடியாக நிறுத்த அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ அதிகாரிகள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டன. விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிடுமாறும், மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழக்கப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
பாலக்காடு அருகே ருசிகரம்; ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியில் இளம்ஜோடி
94.1% பலன்: கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி.!!!
கேரளாவில் பலருக்கு இரட்டை வாக்குரிமை: இ- வாக்காளர் அட்டை பதிவிறக்கத்தால் அதிர்ச்சி
கொலை வழக்கில் தொடர்பு: மாஜி எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை
ரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!