‘சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு’ போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் பலி
2019-09-17@ 00:35:01

கோவை: கோவை ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (53). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தார். அதிக போதையில் இருந்த இவர் ரத்தினபுரி ரயில் பாதையை கடந்து வீட்டிற்கு செல்ல முயன்றார். அந்த நேரத்தில் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி டபுள் டக்கர் ரயில் வந்து கொண்டிருந்தது. தள்ளாட்டத்துடன் சென்ற ஆறுச்சாமி, ரயில் பாதையில் நின்று கையை ஆட்டி ரயிலை நிறுத்து முயன்றார்.
ரயில்வே கேட் கீப்பரும், அவ்வழியாக சென்ற பொதுமக்களும் சத்தம் போட்டு நகர்ந்து போகுமாறு கூறினர். ஆனால் ஆறுச்சாமி தண்டவாளத்தில் ரயிலை நோக்கி கையை ஆட்டி, ‘‘நான் சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு,’’ எனக்கூறியபடியே நின்றார். அதிர்ச்சியடைந்த டிரைவர், ஹாரன் அடித்து எச்சரித்தார். ஆனால் ஆறுச்சாமி விலகவில்லை, பிரேக் பிடித்தும் வேகமாக வந்த ரயில் ஆறுச்சாமியின் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி அவர் பரிதாபமாக இறந்தார்.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!
தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு நான் நன்றாக உணர்கிறேன்: கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவர்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
கோத்தகிரி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் காதை கடித்தவர் கைது
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரிப்பு
சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கோவடியாவுக்கு புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்
அலங்காநல்லூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாடுபிடி வீரர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நீட்டிப்பு
ரத்தினபுரியில் நெய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
சிராவயலில் நடைபெற்று வந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நிறைவு
கொரோனா தடுப்பூசி நம்பிக்கையானது என்றால் ஏன் மத்திய அரசு சார்பில் யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை?: மனிஷ் திவாரி கேள்வி
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை அரசு அறிவிக்கவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
ஜோ பைடன் பதவியேற்பதையொட்டி அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 5-ம் சுற்று நிறைவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்