குலசேகரத்தில் கோழிகளை விழுங்கும் மலை பாம்பை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை
2019-09-16@ 20:04:43

குலசேகரம்: குலசேகரம் குறக்குடி பிலாங்காலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி வந்தன. பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது வீட்டிக்கு செல்லும்போது சாலையை கடந்து சுமார் 8 அடி நீள மலை பாம்பு வருவதை பார்த்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த மலைபாம்பு அந்த பகுதியில் உள்ள வடிகாலில் புகுந்து மறைந்துக்ெகாண்டது.
இது குறித்து அவர்கள் குலசேகரம் வனத்துறையினருக்கு போனில் தகவல் தெரிவித்தனர். போனை எடுத்த வனத்துறையினர் இனிமேல் பாம்பு வந்தால் பிடித்து வைத்துக்கொண்டு தகவல் தெரிவியுங்கள் என கூறி போனை துண்டித்துவிட்டனர். அதன்பின் பொதுமக்கள் நேரடியாக அலுவலகம் சென்று புகார் அளித்தனர். அதன் பின்னரும் பாம்பை பிடிக்க வனத்துறையினர் வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள், மீன்பிடிக்கும் வலைகளை வடிகாலில் மூடி பாம்பு வராத வகையில் தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளனர். என்றாலும் அப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட பயப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் அப்பகுதியில் பதுங்கி உள்ள மலைபாம்பை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள பீதியை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!