கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்?
2019-09-14@ 11:53:17

மும்பை: கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகாரில் விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு எச்எஸ்பிசி ஜெனிவாவில் கணக்கு வைத்திருந்த 700 இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக கிடைத்த விவரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து விசாரணை அமைப்புகள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் புலனாய்வுக்கு பிறகு வருமான வரித்துறையின் மும்பை பிரிவு தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் முகேஷ் அம்பானியின் மனைவி நித்தா அம்பானி மற்றும் அவருடைய 3 பிள்ளைகளுக்கு கடந்த மார்ச் 28-தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகாரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்களை கண்டறிந்து வரி வசூலிக்கும் கருப்பு பண தடுப்பு சட்டம் 10-வது பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளை அடிப்படையாக கொண்ட கேப்பிடல் இன்வெர்ஸ்மென்ட் டிரஸ்ட் மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனங்களை கேமேன் தீவுகளை அடிப்படையாக கொண்ட இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்தின் இறுதி பயனாளர்களாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இருந்ததாகவும் இதுகுறித்த விவரங்களை அவர்கள் கணக்கில் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை நோட்டீஸ் புகாரில் குறிப்பிட்டிருந்ததாவும் தெரிவிக்கின்றன.
மேலும் வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான முதல் விசாரணை தேதியாக கடந்த ஏப்ரல் -12 தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை அடியோடு மறுக்கிறார்.
மேலும் செய்திகள்
போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்?.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.!!!
'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .
2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!