என்ஆர்சி என்ற பெயரில் நெருப்புடன் விளையாட வேண்டாம்: பாஜ.வுக்கு மம்தா எச்சரிக்கை
2019-09-13@ 00:29:07

கொல்கத்தா: `‘தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாட வேண்டாம்,’’ என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட விரோத ஊடுருவலை தடுக்கவும், தேச பாதுகாப்பு கருதியும் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்துவதில் மத்திய பாஜ அரசு உறுதியாக உள்ளது. இதில் பதிவு செய்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு 3.29 கோடி பேர் விண்ணப்பித்தனர். அதன் இறுதி வரைவு பட்டியலில் 2.89 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றனர். ஏறக்குறைய 40 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. பின்னர், கடந்த ஜூலை 31ம் தேதி வெளியான என்ஆர்சி இறுதி பட்டியலில் 19 லட்சம் பெயர்கள் விடுபட்டுள்ளது.
இந்நிலையில், என்ஆர்சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், இக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்க மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சாதி, மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அசாம் மக்களை போலீஸ், நிர்வாகத்தினரைக் கொண்டு மத்திய அரசு ஒடுக்கி விட்டது. ஆனால், மேற்கு வங்கத்தை அது போன்று அடக்கி ஒடுக்க முடியாது.அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மேற்கு வங்கத்தில் 2 பேரையாவது தொட்டு பாருங்கள் பார்க்கலாம். குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பாஜ.வினர் நெருப்புடன் விளையாடுகிறார்கள். நெருப்புடன் விளையாடினால் என்ன நேரும் என்பது அவர்களுக்கு உடனடியாக தெரிய வரும். பல ஆண்டுகளாக மேற்கு வங்க மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். மேற்கு வங்க மக்களை பாஜ ஒருநாளும் பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
கவர்னர் தமிழிசை நேரடி கவனிப்பு: 31 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்...ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்!!!!
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்