வங்கி மோசடிகள் பட்டியல் தயாராகிறது
2019-08-25@ 00:45:46

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் குறித்து பட்டியல் எடுத்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான மத்திய விஜிலென்ஸ் கமிஷன், அரசு துறைகளில் நடக்கும் ஊழல் மற்றும் நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரும். அதன் பேரில் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த அரசு உத்தரவிடும். வங்கிகளில் வராக்கடன் மோசடிகள் ஏராளமாக உள்ளன. இதுபற்றி இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது இது பற்றி தீவிரமாக ஆராய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
மத்திய அரசின் விஜிலென்ஸ் கமிஷனில் நான்கு உறுப்பினர் கொண்ட உயர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ள நிதி மோசடிகள் குறித்து வங்கிகள், உடனடியாக கமிஷனுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையின்பேரில் நான்கு பேர் உயர் குழு உரிய ஆய்வு நடத்தி, இந்த மோசடி குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை என்று பிரித்து விசாரணைக்கு அனுப்பும். வங்கி மோசடிகளை விசாரிக்க ஏற்கனவே ரிசர்வ் வங்கி ஆலோசனையின் பேரில் ஒரு குழு இருந்தது. இதை விஜிலென்ஸ் கமிஷன் மாற்றி அமைத்து நான்கு பேர் குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கியில் நடந்துள்ள 500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மோசடிகள் குறித்து கமிஷனுக்கு அனுப்பலாம் என்று வங்கிகளுக்கு விஜிலென்ஸ் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
பாலியல் சீண்டல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குஎதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடக்கம்!!
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா...! பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என தகவல்
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் :விவசாயிகள் திட்டவட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!