கோடியக்கரை அருகே திருடுபோன ஐம்பொன் சிலைகளை காட்டில் தேடும் கிராம மக்கள்
2019-08-19@ 10:22:58

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே திருடுபோன ஐம்பொன் சிலைகளை கிராம மக்கள் காட்டில் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பிரசித்தி பெற்ற கோடிமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 14ம் தேதி இரவு மர்ம நபர்கள் பின்புறம் உள்ள மதில் சுவரில் ஏறி உள்ளே புகுந்து கோயிலின் 3 பூட்டுகளை உடைத்து அங்கிருந்த மாரியம்மன், முருகன், தேவசேனா, வள்ளி ஆகிய ஐம்பொன் சிலைகளை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர வேட்டை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் சாமியாடி காட்டிற்குள் சிலை இருப்பதாக தெரிவித்ததால், அக்கிராமத்தை சேர்ந்த ஆண், பெண் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காட்டிற்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!