அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமல்: தமிழக அரசு அறிவிப்பு
2019-08-19@ 10:14:56

சென்னை: அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை உயர்வு இன்று (ஆக.19) முதல் நடைமுறைக்கு வருகிறது. விரைவில் ஆவின் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. கால்நடைகளுக்கான தீவனங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையேற்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது. அதே நேரம் விற்பனை விலை லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. பால் விலை உயர்வு காரணமாக ஆவின் நிறுவன தயாரிப்புகளான பால்கோவா, தயிர், லஸ்ஸி, ஐஸ்க்ரீம், பனீர் உள்ளிட்டவற்றின் விலையும் விரைவில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, சேலத்தில் அளித்த பேட்டி: பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என முதல்வர் எடப்பாடி நேற்று சேலத்தில் அளித்த பேட்டியளித்தார். மேலும் டீசல் விலை உயர்வால் பால் கொண்டு செல்லும் செலவு அதிகரித்துள்ளது எனவும் கூறினார். உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். மேலும் கால்நடை தீவனங்களை, ரேஷன் கடையில் விற்க முடியாது என கூறினார்.
மேலும் செய்திகள்
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து
ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்...! நினைவிட திறப்பு விழாவில் ஓபிஎஸ் பேட்டி
ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் கட்சி திமுக தான் : திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!