ஆத்தூர் அருகே இன்று அதிகாலை விபத்து: 30 அடி பாலத்திலிருந்து கவிழ்ந்து பால் டேங்கர் லாரி தீப்பற்றியது.. டிரைவர் பரிதாப பலி
2019-08-18@ 21:23:10

ஆத்தூர்: ஆத்தூர் அருகே இன்று அதிகாலை, 30 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் பால் டேங்கர் லாரி தீப்பற்றியது. இதில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு, டேங்கர் லாரி நேற்று நள்ளிரவு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு புறப்பட்டது. லாரியை வாழப்பாடி அருகே சேசன்சாவடியை சேர்ந்த ஆனந்த் (23) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அப்பம்மசமுத்திரம் கிராம பகுதியில் உள்ள 30 அடி உயர பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் சுவற்றில் மோதிய லாரி, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
கீழே விழுந்த வேகத்தில் லாரியில் தீப்பற்றியது. டிரைவர் ஆனந்த், லாரியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனிடையே பாலத்தில் இருந்து கவிழ்ந்த லாரி தீப்பற்றி எரிவதை பார்த்து, அந்த வழியாக சென்றவர்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து ஆத்தூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு உயிரிழந்து கிடந்த டிரைவர் ஆனந்தின் சடலத்தை கைப்பற்றி, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், டிரைவர் ஆனந்தின் தூக்க கலக்கத்தால் விபத்து நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவி ஓய்வூதியம் பெற 11 ஆண்டாக அலைக்கழிப்பு: ஆட்சியரிடம் மனு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!