கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் யார்? : ஜான்சன்,ஜெரோமி இடையே கடும் போட்டி
2019-07-22@ 12:28:30

லண்டன் : பிரிட்டனின் அடுத்த ஆளுங்கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டதை அடுத்து பிரதமர் தெரேசா மே, பிரதமர் பதவியிலிருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் பழமைவாய்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பதவிக்கு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஜெரோமி ஹன்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஏற்கனவே ஆளும் கட்சியை சேர்ந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்ட நிலையில் நாளை வாக்கு என்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனிடையே போரிஸ் ஜான்சன் திறமை மிக்கவர், அவரது தலைமை மூலமாக பல்வேறு வரலாறு படைக்கப் பட்டிருக்கிறது. மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்சென்றதில் போரிசின் பங்கு இன்றியமையாதது என்று சக போட்டியாளர் ஜெரோமி ஹன்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன், ஜெரோமி ஹன்ட் ஆகிய இருவரில் யார் பிரிட்டன் பிரதமர் என்ற வினாவுக்கு நாளை விடை கிடைத்துவிடும். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் தெரேசா மே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் அளிக்க இருக்கிறார். அதன் பின்னர் ஆளும் கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி நாளை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்...ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது : இங்கிலாந்து பிரதமர் உருக்கம்
உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும்...! தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள்: மாடர்னா நிறுவனம்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
அதிகார மோதலின் உச்சகட்டம் : ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்
தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்!: நாவல்னி கைது சர்ச்சையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை..!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!