அருப்புக்கோட்டை அருகே ஊரணி தூர் வாரும் பணி துவக்கம்
2019-07-20@ 19:37:20

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஊரணி தூர் வாரும் பணி துவங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் நகராட்சி குடிநீர் மேல்நிலைத்தொட்டி எதிரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஊரணி உள்ளது. இந்த ஊரணி ஒரு ஏக்கர் 88 சென்ட் பரப்பளவு கொண்டது. ஊரணியில் இறைச்சி கழிவு, குப்பைகளும் கொட்டப்பட்டன. இதனால் ஊரணி குப்பைமேடாகி துர்நாற்றம் வீசியது. வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கின. ஊரணியை தூர்வாரி பலமுறை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நீர்நிலைகளை சமூக ஆர்வலர்கள் முயற்சியில் பாதுகாக்கலாம் என்ற அரசு உத்தரவிட்டதையடுத்து அருப்புக்கோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்பாண்டியன்,
திருச்சுழி ரோட்டிலுள்ள பிறமடை ஊரணியை தூர்வார அனுமதி கோரி ஆர்டிஓ செல்லப்பாவிடம் மனு கொடுத்தார். ஆர்டிஓ அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது. நிகழ்ச்சியில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், மீனாட்சி சொக்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரி மகேந்திர பூபதி, ஜெயவிலாஸ் தொழில் அதிபர் கார்த்திகேயன், சமூக ஆர்வலர் ராம்பாண்டியன், பாஜ நிர்வாகி வெற்றிவேல், அதிமுக நகர செயலாளர் கண்ணன், பம்பாய் மணி என்ற வீரசுப்பிரமணி, பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி: அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரம்
நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வழங்கப்படுகிறதா?..மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகள் விடுதலை..!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம்தேதி ரதசப்தமி உற்சவம் : ஒரே நாளில் 7 ரதங்களில் சுவாமி உலா
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்