தனியார் கல்லூரியில் மாணவர்கள் தொடர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
2019-07-18@ 00:11:28

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது, இங்கு அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 15ம் தேதி ஒரு தற்கொலை நடந்தது.தற்போது இந்த விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து, காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி பயின்று வரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனுபிரியா (21) கடந்த 26.5.2019 அன்று 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல் 27.5.2019 அன்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனித் சௌத்ரி (19) விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார். 15.7.2019 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தர்சன் (18) மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த 3 நபர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வழக்கினை குற்றவியல் குற்ற புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டுள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கோயில் பூசாரி தற்கொலை
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்