காலிக்குடத்துடன் அலையும் சூழலில் தினமும் பல்லாயிரம் லிட்டர் வீணாகும் காவிரி குடிநீர்
2019-06-25@ 11:24:31

மேலூர்: மேலூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் தண்ணீர் தேடி அலையும் மக்கள் ஒருபக்கம் என்றால் குழாய்கள் உடைந்து தினசரி பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலமும் நடக்கிறது. கடும் குடிநீர் பஞ்சத்தில் ஆண்டுதோறும் தவித்த சில மாவட்ட மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்தது காவிரி கூட்டு குடிநீர் திட்டம். இதற்காக திருச்சி மாவட்டம் கரூரில் இருந்து ராட்சத குழாய்கள் 200 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு தினசரி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவற்றை கண்காணிக்க ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினசரி பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் சேதம் ஏற்பட்டு, தண்ணீர் கசிகிறதா, குடிநீர் வால்வுகளில் சேதம் உள்ளதா, குழாய்களை உடைத்து தண்ணீர் திருடப்படுகிறதா, மொத்தத்தில் தண்ணீர் வீணாகாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதை கண்டுகொள்வதே இல்லை. பத்திரிகைகளில் தண்ணீர் வீணாவது குறித்து செய்தி வெளியான பிறகே அவற்றை சீர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலூர் அருகே கல்லம்பட்டியில் சாலையோரம் உள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாயின் வால்வு உடைந்து, தினசரி பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. பல நாட்கள் இப்படி தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் அருகில் உள்ள வயல்வெளிகளில் பாய்ந்து அந்த இடத்தில் புதிய குளமே உருவாகி விட்டது. உடனடியாக இதை சரி செய்து வீணாகும் குடிநீரை பொதுமக்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
கோவில்பட்டியில் கலைநயத்துடன் வடிவமைக்கப்படும் சுவாமி சிலைகள்: பக்தர்கள் இடையே வரவேற்பு
கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 ஊராட்சிகளில் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் சுற்றிய வாலிபர்...! சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிதிருத்தம் செய்த காவல் ஆய்வாளர்
மந்த கதியில் சாலை பணி போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
பவித்திரம் ஏரிக்கரையில் சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
பழுதடைந்த குடமுருட்டி பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதி-இடித்துவிட்டு புதிதாக கட்ட வலியுறுத்தல்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்